districts

img

குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் குற்றாலத்தில்  மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகிய இரண்டு அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது . ஆனால் புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் பக்தர்கள் வழக்கம்போல் குளித்து மகிழ்ந்தனர் குற்றாலம் காவல்துறை சார்பில் மெயின் அருவி பழைய குற்றால அருவிகளின் நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.