districts

img

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் திங்களன்று நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது. இதனை தியாகத் திரு நாள் என்றும் அழைக்கின்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, திருச்சி என்எஸ்பி ரோட்டில் உள்ள ஹசன் பாக் மசூதி,  பீரங்கி குளத்தெருவில் உள்ள அமீர் மசூதி, மார்க்கெட் அருகில் உள்ள பேகம் சாஹீபா மசூதி,  டவுன் ஹால் எதிரில் உள்ள முகமதியா மசூதி யில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 'திருச்சி கண்டோன்மென்ட் பறவை சாலை,  தலைமை தபால் நிலையம் அருகில் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு அறக்கட்டளை சார்பில்  சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருச்சி மரக் கடை பகுதியில் உள்ள சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதா னத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை  நடை பெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். 

ஆயப்பாடி பள்ளிவாசல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித்  பள்ளிவாசல் சிறப்பு தொழுகையில் முத்தவல்லி  பஷீர் அகமது, செயலாளர் நூருல்லாஹ், பொரு ளாளர் ஹலில் ரகுமான், இமாம் கமாலுதீன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல்மாலிக், விசிக மாநில இஸ்லாமிய பேரவை துணை செயலாளர் முஜிபுர் ரகு மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் நீடூர், சீர்காழி வடகரை, பூந்தாழை, பொறையார், ஆக்கூர், சங்கரன்பந்தல், வடகரை, பெரியகூத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.