விபத்து ஏற்படும் முன் அரசு கவனம் செலுத்துமா?
திருவாரூர், ஏப்.21-
திருவாரூர் மாவட்ட கிராமங்களில் அதானி செல் நிறுவனம் சார்பில் நெட் ஒர்க் ஒயர் செல்ல சிமெண்ட் கம்பம் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிமெண்ட் கம்பங்களால் விபத்து ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தின் சார்பில் கம்பி வடம் செல்ல நிறுவப்பட்டுள்ள சிமெண்ட் தந்தி கம்பங்களில், அதானி நிறுவனத்தின் செல் நெட்வொர்க் இணைப்பு ஒயரை இணைத்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதி காரியிடம் கேட்டபோது, அதானி நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் நேரடியாக அனுமதி பெற்று, எல்அண்டுடி நிறுவனம் சார்பில் சிமெண்ட் கம்பம் அமைக்கும் பணி நடை பெறுவதாக தெரிவித்தனர்.
அரசின் மின் கம்பம் வரிசையாக இல்லாத இடங்களில் அதானி நிறுவனம் சார்பில் நெட்ஒர்க் வயர் சீராக செல்லும் வகை யில், சிமெண்ட் கம்பம் அமைத்து அதன் வாயிலாக நெட்ஒர்க் ஒயர் செல்கிறது.
தீக்கதிர் செய்தியால் வயர் துண்டிப்பு
இப்படி அமைக்கப்படும் சிமெண்ட் கம்பங்கள் சாலைக்கு மிகவும் நெருக்க மாக, விபத்து ஏற்படும் வகையில் அமைக்கப் படுவதாக சுட்டிக்காட்டி, கடந்த மார்ச் 10 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக நெட்ஒர்க் செல்லும் வயரை துண்டித்து விட்டது. ஆனால், விபத்து ஏற்படும் வகையில் சாலை அருகில் அமைக் கப்பட்ட சிமெண்ட் கம்பம் இதுவரை அப்புறப் படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இரண்டு தினங் களுக்கு முன்பு அரசவனங்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே அதானி நிறுவனத்தின் சார்பில் தரமற்ற வகையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் கம்பம் சாலை யின் மறுபுறம் வயல் பகுதியில் சாய்ந்தது.
எனவே, அதானி நிர்வாகம் சார்பில் தன்னிச் சையாக அமைக்கப்படும் சிமெண்ட் கம்பத் தால் பெரும் விபத்து ஏற்படும் முன் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களில் இப்படி தரமற்ற வகையில் அமைக்கப்படும் சிமெண்ட் கம்பங்களால் எவ் வகை அபாயம் ஏற்படும் என கவலையும், கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் எழுந் துள்ளது.
எனவே, இப்பணி முறையாக நடைபெறு கிறதா என மாவட்ட ஆட்சியர் உடனடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.