அரியலூர், ஜன.31 - தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை யொட்டி அரியலூரில் செவ்வாயன்று விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே தொடங் கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிர சுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பேரணியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்ற னர். பேரணியானது பிரதான சாலை வழியா கச் சென்று ஒற்றுமைத் திடலில் முடிவ டைந்தது. நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், மோட் டார் வாகன ஆய்வாளர் சரவணபவ, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.