districts

img

பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது

தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில், ‘உமன்ஸ் பாய்ண்ட் இன்ஸ்டிடியூசன் ஆப் பேஸன் டெக்னா லஜி’ அமைப்பு சார்பில், பல்வேறு துறை களில் சாதனை படைத்த பெண்களுக்கு  விருது வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிர்வாக  இயக்குநர் பிரபா தலைமை வகித்தார்.  பட்டுக்கோட்டை காவல் துறை கண்கா ணிப்பாளர் எஸ்.பாஸ்கர், மருத்துவர் தேவி ராஜேந்திரன், சின்னத்திரை கலைஞர் சசிலயா, அழகுக்கலை நிபுணர் பரமு, கல்வி, வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஜெ.சத்திய மூர்த்தி ஆகியோர், அழகுக்கலை, தொழில்துறை, சமூக செயல்பாட் டாளர்கள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 50 பெண்களுக்கு விருது, பதக்கம், சான்றிதழ், நினைவுப்  பரிசு வழங்கி பாராட்டினர்.