பெரம்பலூர், நவ.8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலையப்ப நகரில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ரூ.95.23 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உண்டு உறை விடப் பள்ளி கட்டடத்தை, காணொலி வாயி லாக வெள்ளிக்கிழமை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மலையப்பா நகரில் ரூ.95.23 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உண்டு உறை விடப் பள்ளி கட்டடத்தை குத்து விளக்கேற்றி, பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு களை வழங்கினார். இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் மு.முருகம்மாள், ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.