தருமபுரி, ஜூலை 1- நில மோசடிக்கு உடந்தையாக இருந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரவேண்டும் என குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வுள்ள பெலமாரனஅள்ளி காட்டுக்கொட் டாய் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான 1. சிவமணி(60) மற்றும் 2. மாதயைன்(65) இவர்களுக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட பனிரெண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சுமார் நான்கு தலைமுறைகளாக வீடுகள் கட்டியும், கிணறு வெட்டியும் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனர். கல் காடக இருந்த இடத்தை சமன் செய்து விவசா யம் செய்துவருகின்றனர். இந்த இடத்திற்கு கந்தாயவரி முறை யாக செலுத்திவருகின்றனர். 2000 ஆம் ஆண்டில் முதலமைச்சர் உட்பிரிவு திட்டத் தின் கீழ் இவர்கள் இருவரும் பாகப்பரிவினை செய்து நிலத்தை பிரித்து உட்பிரிவு செய்து கொண்டனர். அதன்பின்பு விவசாய நிலத் தில் கிணறு வெட்டி மின் இணைப்புப் பெற்றுள் ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட் டத்தை சேர்ந்த சீதாராமன் என்பவர் தங்களு டைய நிலத்தினை அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலத்திற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து, சிலருக்கு 2023 ம் ஆண்டு விற்பனை செய்திருக்கிறார், இந்த விபரம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட நபர்களிடம் கேட்ட போது, மொத்த குடும்பத்தையே கொலை செய்து விடுவோம், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என மிரட்டுகின்றனர். எனவே, எங்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீதும், பணத்திற் காக போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த அரசு அலுவலர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் நிலத்தை மீட்டுத் தர வேண்டுமென மனு அளித்தனர்.