districts

img

பாஜகவை வீழ்த்துவோம்!

திருச்சிராப்பள்ளி,ஜன.27- திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளியன்று ‘வெல்லும் சனநாயகம்’ என்னும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

 மாநாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வரவேற்றார். பொதுச்செயலாளர் து.ரவிக்குமார் எம்.பி., நோக்கவுரையாற்றினார்.

கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஜனநாயகம் வெல்லும் என்ற இந்த மாநாடு அரசியல் களத்தில் ஜனநாயகத்தை வெல்ல வைப்பது மட்டுமல்ல. நாடாளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் ஜனநாயகத்தை வெல்ல வைப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு கிராமத்திலும் அனைவரும் சமம் என்று சொல் கின்ற அந்த ஜனநாயகத்தை உருவாக்குகிற மகத்தான போ ராட்டத்தில் இணைந்து கொள்கிற மாநாடு. பாஜகவை வீழ்த்து கின்ற இந்தியா கூட்டணிக்காக மட்டும் அல்ல; சாதிய, வர்ணா சிரம தர்மத்தை சவக்குழிக்கு அனுப்பி பேதமற்ற சமூகத்தை அமைப்பதற்கு நாம் இணைந்து பணியாற்றுவோம் என்ற அடிப்படையில் தான் செங்கொடி இயக்கமும், அம்பேத்கரிய இயக்கங்களும் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

தொல். திருமாவளவன்
தொல்.திருமாவளவன் பேசுகையில், “நாட்டில் நிலவும் வறுமை, பொருளாதார பிரச்சனைகள், வேலையில்லா திண் டாட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே, கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராமர் கோவிலை இப்போது திறந்துள்ளனர். ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்படுகிறது. ராமரை முதலீடாக வைத்து ஓட்டு வாங்கப் பார்க்கின்றனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிதாக ஒரு அரசியல மைப்புச் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். சமூகநீதி கேள்விக்குறி யாகிவிடும். எனவே ஜனநாயகத்தை வெல்லச் செய்ய வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

து.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியசெயலாளர் து.ராஜா பேசுகையில், “மதம் சார்ந்த அரசியலால் அழிவு மட்டுமே நடக்கும். இந்தியாவில் இப்போது சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரம் என்ற அமைப்பை உருவாக்கலாம் என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கி றது. எனவே பாஜக ஆட்சியை தூக்கி எறிய சரியான தருணம் வந்து விட்டது. பாஜகவை வீழ்த்தினால் மட்டுமே உண்மை யான ஜனநாயகம் மலரும்” என்றார்.

தீபங்கர் பட்டாச்சார்யா
சிபிஐஎம்எல் (விடுதலை) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேசுகையில், “வேலை, கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு அம்சங்க ளில் இந்தியா தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொண்டி ருக்கிறது. மதத்தின் பெயரால் இதுபோன்ற விசயங்களை மறக்கடிக்க ராமரை பாஜக தொடர்ந்து அழைத்துக் கொண்டி ருக்கிறது. மக்கள் இந்த தருணத்தில் உஷாராக இருப்பது அவசியம். ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்” என்றார். 

கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகை யில், “பொய்களை மட்டுமே பாஜக தொடர்ந்து பேசி வரு கிறது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெற முடியாது” என்றார். 

காதர் மொய்தீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத்தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், “இந்தியா ஒரு மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதை மீட்கவே இந்தியா அணி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.  

வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலா ளர் வைகோ பேசுகையில், “பாஜக ஆட்சி மீண்டும் தொடர்ந் தால் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டு என்ற நிலை கூட வரும். மக்களுக்கான ஆட்சியை சனாதன தர்மம் என்ற பெயரில் ஒரு தலைபட்சமாக நடத்தலாம் என மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.  

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், சிபிஐஎம்எல் மாநிலச் செய லாளர் பழ.ஆசைதம்பி, சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்த ரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொ. ம.தே.கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆம்ஆத்மி கட்சி  தமிழ்நாடு தலைவர் வசீகரன்  ஆகியோர் உரையாற்றினர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே மாநாட்டிற்கு வர இயலாததால் அவரது ஆங்கில உரையை நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வாசித்தார். 

தொகுப்பு: எஸ்.விஜயகுமார்