பட்டுக்கோட்டை, ஏப்.28-
பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பட்டுக் கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட 6 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறுகிறது.
முகாமில் புதிய ஆதார் பதிவு, பழைய ஆதார் அட்டை யில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்வ தற்கு ரூ.50, பயோமெட்ரிக் திருத்தம் செய்வதற்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
10 ஆண்டிற்கு முன்பு புதிதாக ஆதார் எடுத்த அனை வரும் தங்களின் விவரங்களை உறுதிப்படுத்த தங்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்க ளில் ஒன்றை பதிவேற்றம் செய்ய இந்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.50 ஆகும்.
பொதுமக்களின் வசதிக்காக பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இரண்டு கவுண்டர்களில் சேவை வழங்கப்படுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.