திருச்சிராப்பள்ளி, மே 29-
திருச்சிராப்பள்ளி ராம்ஜிநகர் பகுதியில் உமா பரமேஸ்வரி பஞ்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 820 தொழிலா ளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த ஆலை கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி மூடப்பட்டது. இதை யடுத்து இங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்கக்கோரி சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது.
இதற்கிடையில் 880 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ13 கோடியை வழங்க மில் நிர்வாகத் தின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் மூலம் வந்த ரூ 37 கோடியே 68 லட்சத்தை சென்னை கலைத்தல் (ஒ.எல்) அதிகாரியிடம் வழங்காமல் பஞ்சாலையை ஏலம் விட்ட நிறுவனம் தன் வசமே வைத்துக் கொண்டது. இதனால் தொழி லாளர்களுக்கு பணம் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இந்த நிலையில் பஞ்சாலை தொழிலாளர் சங்கச் செய லாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க நிர்வாகி பாலன் பாலன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 6-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அலுவலகம். முன் ஆர்ப்பாட் டம் நடத்தி மனு அளிப்பது. தொடர்ந்து மில் நிர்வாகத்திற்குச் சொந்தமான நிலத்தில் மில் தொழிலாளர்கள். குடிசை போட்டு குடியேறுவது என முடிவு செய்யப்பட்டது. போராட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.