மயிலாடுதுறை, செப்.29- மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயி லாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தா லம் ஆகிய வட்டங்கள் என மாவட்டம் முழு வதும் 100 க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும் விவசாயி களிடமிருந்து பெறப்பட்ட பல்லாயிரக்க ணக்கான நெல் மூட்டைகளும், விற்பனை செய்வதற்காக விவசாயிகள் மையங்களில் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளும் மலைப்போல் குவிந்துக் கிடக்கின்றன. நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச்செல்ல தேவையான லாரிகளை அனுப்பாததால் சரிவர கொள்முதல் செய்ய முடியாமலும், போதுமான இடவசதி, பாது காப்பு ஏற்பாடுகள் முறையாக இல்லாததா லும் நிலைய அதிகாரிகள் தவித்து வரும் நிலையில், கடந்த 5 நாட்களாக பெய்துவரும் கன மழையால் நெல் மூட்டைகள் பல மையங்களில் நனைந்து கிடக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட தலைவரும், மாநிலக்குழு உறுப்பினரு மான டி.சிம்சன் கூறும் போது, ‘‘குறுவை அறுவடை முழுமையாக நிறைவடைந்து அடுத்த சாகுபடி செய்ய விவசாயிகள் தயா ராக வேண்டிய நிலையில், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்க ளில் அடுக்கி வைத்துவிட்டு காத்துக்கிடக் கும் நிலை நீடித்து வருகிறது.
போதுமான லாரிகளை முறையாக அனுப்பி வைக்காததாலும், போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகளும், நிலைய அதிகாரிகளான பட்டியல் எழுத்தர்களும் உள்ளனர். மேலும் பல மையங்களில் விவ சாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்பா மல் அங்கேயே “கேப் “போட்டு அடுக்கி வைக்கச் சொல்லி தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வும் அதற்காக தார்பாய்களையும், மரங் களையும் வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இப்படி அடுக்கி வைத்தால் விரைவாக கிடங்குகளுக்கு நெல்லை எடுத்துச்செல்ல வாய்ப்பில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி தொடர்ந்து மாலை நேரங்க ளில் கனமழையும் பெய்து வருகிறது. இத னால் என்ன தான் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தாலும் திறந்த வெளியில் இருப்பதால் முளைவிட்டு வீணா கும் நிலை நிச்சயம் ஏற்படும். எனவே நெல்லை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டாமல் ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்துச்செல்ல தேவை யான லாரிகளை அனுப்பி வைக்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளார்.