திருச்சிராப்பள்ளி, ஜன, 4- திருச்சிராப்பள்ளி விமான நிலைய வளர்ச்சி குறித்த ஆலோசனை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட் டத்தில் திருச்சி கிழக்கு தொ குதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பேசியதாவது: திருச்சி விமான நிலை யத்தில் போலீஸ் உள்ள பூத்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். எனவே சிஐஎஸ்எப் வீரர்களுடன் ஒருங்கிணைந்து, உள்ளூர் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வாக னங்களுக்கான நுழைவு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தற்போது, பெய்த மழையில், விமான நிலைய வளாகத்தில் போதிய வடி கால் இல்லா ததால், கொட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்தது. எனவே திருச்சி விமான நிலையத்தில் குடி யிருப்புகள் பாதிக் கப்படாத வகையில், வடிகால் அமை க்க வேண்டும். பயணிகளிடம் அத்துமீறும் சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் இருந்து, டில்லி, கொச்சி நகரங்களுக்கு விமான சேவை அளிக்க ஒன்றிய அரசிடம் வலி யுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.