பாபநாசத்தை அடுத்த அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லயன் (தனியார்) பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் ‘அருமொழி விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. சோழர் வரலாற்று ஆய்வு சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். என்.ஆர். இளங்கோ எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார்.