districts

img

கலைஞர் நூற்றாண்டு விழா: திருச்சியில் மாரத்தான் போட்டி

திருச்சிராப்பள்ளி, பிப்.25 - முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற் றாண்டு விழா தமிழக முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி  தெற்கு மாவட்ட, மாநகர தொ.மு.ச. சார்பாக  திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்து பவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தொ.மு.ச. முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தினராக கழகத் துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி மற்றும்  திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொ.மு.ச. பேரவை  பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரச் செய லாளரும், மண்டலக் குழுத் தலைவருமான மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்ட னர். மாரத்தான் போட்டியில், 8 முதல் 18 வயது  வரை உள்ள மாணவ-மாணவிகள், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ-மாணவி கள், 18 வயதிற்கு மேலே உள்ள ஆண்கள், பெண்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள்  சுமார் 500 பேருக்கும் மளிகை பொருட்களை கழக துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி ஆகியோர் வழங்கினர். தொ டர்ந்து சோழன் உலக சாதனை கின்னஸ் சார்பாக, சுமார் நூறு பேர் கலைஞர் வேட மிட்டு பரதநாட்டியம் ஆடியது வியப்பை ஏற்படுத்தியது. முன்னதாக தொ.மு.ச. பெல் பொதுச் செயலாளர் கணேஷ்குமார் வரவேற்றார். அமராவதி கூட்டுறவு சங்க செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினர்.