districts

img

சமத்துவ பொது மயான நுழைவாயிலை இடித்த பாஜக பிரமுகரை கைது செய்க!

நாகப்பட்டினம், ஜூன் 30 - நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட  சமத்துவ மயானத்தின் நுழைவா யிலை இடித்த பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திரா நதி சட்ரஸ் பாலத்தின் அருகில், சமத்துவ பொது  மயானம் உள்ளது. இந்த மயா னத்தை அனைத்துப் பகுதியினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்தின் நுழைவா யிலை இயந்திரம் கொண்டு இடித்த பாஜக பிரமுகரும், பேரூராட்சி துணை தலைவருமான கதிரவன் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் அ.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த மயானத்தை குறிப்பிட்ட  சாதியினர் மட்டுமே பயன்படுத்த  வேண்டும் என்ற உள்நோக்கத்தோ டும், ‘சமத்துவ பொது மயானம்’ என  பொதுப் பெயர் இருப்பது மனதள வில் அவருக்கு பிடிக்காமல் இருக்கிற  காரணத்தினாலும், பேரூராட்சி நிர்வா கத்திற்கு தெரியாமல் பாஜக பிரமுகர்  கதிரவன் இதை இடித்ததாக கூறப்படு கிறது.  இதனிடையே வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பா ளர் உத்தரவின் பேரில், தலைஞா யிறு காவல்துறை ஆய்வாளர் தலை மையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், சம்பந்தப் பட்ட நபர் மீது வழக்குப் பதிந்து  கைது செய்வதாக காவல்துறையி னர் கூறினர். அதற்கு, சம்பந்தப்பட்ட நபர் மீது சாதாரண பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு  பதிவு செய்ய வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. இதில் உரிய நட வடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆய்வாளர் உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. சாதி ஆணவத்தோடு செயல்பட்ட  பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து கண்டன உரையாற்றி னார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண்டர், வி.ராஜகுரு, டி.செல்லையன் ,ஜி.செல்வராஜ், செல்வகுமார், ஆர்.தங்கதுரை, தலைஞாயிறு நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், திமுக நகரத் தலைவர் சி.சுப்பிரமணியன், திமுக பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.ராஜேந்திரன், சிபிஐ மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சம்மந்தம் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி  உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.