அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
அரியலூர், ஜன.6 - அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றி யக்குழு தலைவர் செந் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சியில் நடைபெ றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், வரவு - செலவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் செலவினங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
அரியலூர், ஜன. 6- அரியலூர் மாவட் டம், ஆண்டிமடம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடு பட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆண்டிமடம் அருகே யுள்ள நெட்டலக்குறிச்சி, நீதி வழித் தெருவைச் சேர்ந்தவர் சுசில்ராஜ் (26). இவர் கடந்த 2.12.2023 அன்று தனது கூட்டா ளியுடன் சேர்ந்து, பொன் னேரி கரையில் வழிப்பறி யில் ஈடுபட முயன்ற போது ஜெயங்கொண் டம் காவல் துறையின ரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா பரிந்து ரையின் பேரில், சுசில் ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளிக்கிழமை உத்தர விட்டார். இதையடுத்து சுசில்ராஜ் கைது செய் யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
ஆசிரியர்களுக்கு கூட்டம்
அறந்தாங்கி, ஜன.6 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கான கூட்டம் நடை பெற்றது. வட்டார கல்வி அலு வலர் செழியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி, சிறப்பு பள்ளி, தூய் மைப் பணி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணி கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.