districts

அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது

திருநெல்வேலி, ஜூன் 25-

   கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி  செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானை  நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந் துறை வன சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. அரி  கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரி  கொம்பன் யானை மெலிந்த உடலுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

   இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானையை டாக்டர் குழு வினர் கண்காணித்து வருகிறார்கள். தின மும் யானை சாப்பிடும் உணவு கண்காணிக்  கப்பட்டு வருகிறது. யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல்  நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க லாம் என்றனர்.  

    இந்நிலையில் யானையின் மெலிந்த உடல் குறித்த புகைப்படங்களின் உண்மை  தன்மை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்  பகப்பிரியா கூறுகையில் அரி கொம்பன் யானை நலமுடன் உள்ளது. மெலிந்த நிலை யில் இருந்தாலும், உடல் உறுப்புகள் நல்ல  நிலையிலேயே உள்ளது. முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உடல் உப்பிச மாக காணப்பட்டது. தற்போது காட்டு உணவு, புல் வகைகளை சாப்பிடுவதால் வனவிலங்குகளுக்கே உரித்தான உடல்  வாகுக்கு அரி கொம்பன் வந்து கொண்டி ருக்கிறது. காட்டு விலங்குகள் இப்படித் தான் இருக்கும். யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கி றது. நன்றாக நடக்கிறது. வனத்துறை கால  நடை மருத்துவர்களின் கண்காணிப்பி லேயே யானை தொடர்ந்து இருந்து வருகி றது. தொலைதூரத்தில் இருந்து அதாவது  100 மீட்டர் தொலைவில் இருந்து புகைப்  படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதைபோல் தெரிகிறது என் றார்.