districts

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் வில்வித்தை போட்டி

கும்பகோணம், ஆக.18- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான வில் வித்தை போட்டி நடை பெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள  பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள்  கலந்து கொண்டனர். 6 வயது முதல் 14  வயதுக்குட்பட்ட மாணவ-மாணவியர் களுக்கு இப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் களுக்கு 6 பிரிவின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். போட்டி யில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி யர் கலந்து கொண்டனர்.