districts

img

அறந்தாங்கி: மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி, நவ.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல், கருங்குழிகாடு கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் மாபெரும் மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, புதுபூட்டு மாடு என நான்கு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பொதுமக்கள் இதை கண்டு ரசித்தனர். இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு   ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. நாகுடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.