districts

img

ஏப்.5 தில்லி பேரணி விளக்கப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 27- ஒப்பந்த முறை ஒழிக்கப்  பட்டு ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும். வேளாண் விளை பொருட்க ளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார  விலை வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும். தொழி லாளர் விரோத சட்டத் தொகுப்பு  களையும், மின்சார சட்டத் தையும் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட  14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 5 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள பேரணி விளக்க மக்  கள் சந்திப்பு பிரச்சார இயக்  கம் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் ஞாயி றன்று தா.பேட்டை ஒன்றி யத்தில் நடைபெற்றது.  பெருகனூரில் தொடங் கிய பிரச்சார இயக்கம் கலிங்  கப்பட்டி, ஊரக்கரை, தா. பேட்டை, பிள்ளாதுறை பேருந்து நிலையம் கடைவீதி யில் நிறைவு பெற்றது.  பிரச்சாரத்திற்கு விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் தங்கராசு தலை மை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சேகர், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க ஒன்றியச் செய லாளர் வீரவிஜயன், கட்சி யின் மூத்த தலைவர் சுப்ர மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.