ஆட்சியர் தகவல் கரூர், ஜன.13 - 2023-24 ஆம் ஆண்டிற் கான திருநங்கையர் விருது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று வழங்கப் பட உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இவ்விருது பெற விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன் னேறி சாதனை படைத்த திரு நங்கையரை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமான ஏப்.15 அன்று, திரு நங்கைக்கான முன்மாதிரி விருது ரூ.1,00,000 கா சோலை மற்றும் சான்றுடன் வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கடைசி நாள் - 31.1.2024. விதிமுறைகள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கை களுக்காவது, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரி யத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது ஆகிய விதி முறைகள் உள்ளன. விருது தொடர்பான விப ரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்.04324-255009 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.