பெரம்பலூர், ஏப்.24-
அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள் முன்பு ஏப்ரல் 25 அன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபடுவது என அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க பெரம்பலூர் மாவட்டச் செயற்குழு கூட்டம் துறை மங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. மாவட்ட துணைத்தலைவர் தன லெட்சுமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மு.மணிமேகலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் ஆகியோர் விளக்கி பேசி னர்.
திருவாரூர்
இதேபோல், திருவாரூரில் நடை பெற்ற கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் தவமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரேமா முன் னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சித்ரா, துணைத் தலைவர் திரிபுர சுந்தரி, மாவட்டப் பொருளாளர் மாலதி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பள்ளி, கல்லூரிக ளுக்குமே மாதம் கோடை விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு ஏப்ரல் 25 (செவ்வாய்) முதல் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.