districts

img

மக்கள் விரோத பாஜகவை தூக்கி எறிவோம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

அரியலூர், ஏப்.13 - பாஜகவை தூக்கி எறிந்து, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டு மென அரியலூர் பிரச்சாரத்தில் சிதம்பரம் வேட்பாளர் திருமாவளவன் கூறினார். அரியலூர் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் தொல். திருமாவளவன், போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரியலூர் அண்ணா சிலை அருகே பிரச்சாரத்தை தொல்.திருமாவளவன் பேசிய தாவது:  தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டா லின் தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளார். அந்த தேர்தல் வியூகம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்‌. தளபதி ஸ்டாலின் தனது தேர்தல் களத்தை தமிழகத்துடன் சுருக்கி கொள்ளாமல், தேசிய அளவில் ராகுல் காந்தியுடன் கை கோர்த்து அனைத்து ஜனநாயக சக்தி களையும் ஒருங்கிணைத்து ‘இந்தியா’ கூட்ட ணியை உருவாக்கியுள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் பேசப்படும் ஒன்றாக அமைய உள்ளது. தேசத்தை மீட்க வேண்டும். மக்களை  காப்பாற்ற வேண்டும். இந்திய ஜனநாய கத்தை குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து, இந்த களத்தை விரிவுபடுத்தி உள்ளார். இந்த தேர்தல் இந்திய மக்களுக் கும், சங்பரிவார் கும்பலுக்கும் நடக்கும் தர்ம யுத்தம். கருத்தியல் போர். இதில் மக்கள் வெற்றி பெற வேண்டும். மக்களுக்கு இந்தியா  கூட்டணி துணை நிற்கும்.  நமது முதல்வர் எடுத்துள்ள இந்த தேர்தல்  வியூகம், மோடி, அமித்ஷாவை நடுங்க வைத் துள்ளது. அதனால்தான்‌ பிரதமர் மோடி, அகில இந்திய‌ கட்சியான காங்கிரஸ் கட்சி யைவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திமுகவை எதிர்க்கிறார். குடும்ப கட்சி, குடும்ப  ஆட்சி‌ என்றெல்லாம் கூறுகிறார். மேலும், தமிழ் பிடிக்கும்; இட்லி பிடிக்கும் என்கிறார். இந்த நாடகம் எல்லாம் திமுகவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வைக்கும் செக் என்பதுதான் உண்மை.  எனவே, மோடியை வீட்டுக்கு அனுப்ப, பாஜகவை தூக்கி எறிய, எனக்கு பானை சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்ட ணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர் சட்டமன்ற உறுப்பி னர் சின்னப்பா உள்ளிட்ட கூட்டணி கட்சியின்  முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.