districts

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் காவல்துறையால் கைது - அடைத்து வைப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழி யர்கள் ஏராளமானோர் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் அவர்கள், தங்க ளின் பிரதான கோரிக்கைகளை வலியு றுத்தி சென்னையில் ஜூலை 30 அன்று  காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்த னர்.  இதில் பங்கேற்பதற்காக திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்டனர். அவர்களை காவல்துறை யினர் கைது செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து 3 பேருந்துகள், 3  வேன்கள் மற்றும் ரயில்கள் மூலமாக 250  பேர் திங்களன்று இரவு புறப்பட்டனர். அதில் காட்டூரில் இருந்து புறப்பட்ட பேருந்தை கண்டோன்மென்ட் காவல் துறையினர் இரவு 11 மணிக்கு மேல் தடுத்து  நிறுத்தி, கைது செய்வதாக கூறி கரு மண்டபம் பகுதியில் ஒரு தனியார் மண்ட பத்தில் அடைத்து வைத்தனர். தகவலறிந்த சங்க நிர்வாகிகள் லெட்சுமி, ஜெயந்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாநிலக் குழு  உறுப்பினர் செல்வி, மாவட்ட தரைக்கடை  சங்க தலைவர் கணேசன் மற்றும் ஆட்டோ மணிகண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து இரவு 2:30 மணிக்கு செல்வதற்கு அனுமதித்தனர். இதை யடுத்து அனைவரும் சென்னை புறப்பட் டுச் சென்றனர்.

சோழபுரம் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராள மான மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் வேனில் சென்னைக்கு பயணித்த னர். அப்போது கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில், இவர்களை சோழ புரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி  நள்ளிரவு 11 மணிக்கு தனியார் மண்ட பத்தில் அடைத்தனர். பெண்கள் என்றும்  பாராமல் சோழபுரம் காவல் நிலை யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், ஊழி யர்களை அவமரியாதையாக பேசியு உள்ளார். தகவலறிந்த சிஐடியு மாநிலச்  செயலாளர் ஜெயபால், திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல், ஒன்றிய குழு உறுப்பினர் ரங்க சாமி ஆகியோர் நள்ளிரவில் ஊழியர்களை  சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், பெண் காவலர்களே இல்லா மல், பெண்களை அடைத்து வைத்திருப்ப தையும், காவலர் ஜெயக்குமார் அவதூ றாக பேசியதையும் கண்டிக்கிறோம் என  சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது  திருவிடைமருதூர் டிஎஸ்பி  சம்பந்தப் பட்ட காவலர் ஜெயக்குமாரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தர விட்டார். இதனிடையே போராட்டத்தில் கலந்து  கொண்ட ஊழியர் ஒருவர், உடல் நலக் குறைவால் மயக்கமடைந்து கீழே விழுந்த தில், அவர் கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்திலிருந்து சென்ற மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை திங்களன்று இரவு திருவா ரூர் ரயில் நிலையத்தில் காவல்துறை யினர் அராஜகமாக கைது செய்து, திரு மண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.  காவல்துறையின் இச்செயலுக்கு கண்டம்  தெரிவித்து, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமையில் திரு வாரூர் ரயில் நிலையம் அருகே செவ்வா யன்று காலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி  மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிமொழி மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மன்னார்குடி மன்னார்குடியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் சென்னை செல்வதற்காக மன்னார் குடி ரயில் நிலையத்தில் திங்களன்று இரவு 10 மணியளவில் திரண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னார்குடி காவல் துறையினர் அவர்களை கைது செய்து மன்னார்குடி காமராஜ் திருமண மண்ட பத்தில் இரவு முழுவதும் தங்க வைத்த னர்.  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிய ளவில் அவர்கள் மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் கைதைக் கண்டித்து, இவர்கள் திடீரென மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இல்லம் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிமொழி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் பிரேமா மற்றும் சிஐ டியு தலைவர்கள்,  உள்ளாட்சி துறை ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்

கரூர்

கரூரிலிருந்து 43 பேர் தனியார் பேருந்து மூலமாக சிஐடியு மாவட்ட  உதவி செயலாளர் சி.ஆர்.ராஜமுகமது தலைமையில் இரவு 11:30 மணியள வில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற  பேருந்தை இரவு 12:30 மணியளவில் லாலா பேட்டை போலீசார் லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் தடுத்து நிறுத்தி னர். காவல்துறையின் அராஜகமான நட வடிக்கையை கண்டித்து நள்ளிரவு 1.30 மணியளவில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் யாஸ்மின் தலைமையில் கரூர்- திருச்சி சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து குளித்தலை டிஎஸ்பி,  லாலாபேட்டை ஆய்வாளர் ஆகியோர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்கள் வந்த பேருந்தி லேயே அழைத்து வந்து கரூரில் உள்ள  திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.  மாவட்டச் செயலாளர் மணிமேகலை, பொருளாளர் மேரி உட்பட பலர் இருந்தனர். தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்களை, சிஐடியு  கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர்.