கும்பகோணம், பிப்.13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், எழுத்தாளர் பிரேமி எழுதிய “அம்மாவின் டைரி” நூல் அறிமுக விழா நடைபெற்றது. நூல் அறிமுக விழாவிற்கு கவிஞர் மு.அய்யூப்கான் தலைமை வகித்தார். கவிஞர் வெண்ணிலா துவக்க உரை யாற்றினார். கவிஞர்கள் பாரதிமோகன், கிருபாகரன், இலக்கிய ஆர்வலர்கள் அப்துர் ரஹ்மான், திரிபுரசுந்தரி, ரத்த தான டிரஸ்ட் கணேசன், ஆசிரியர் விமலாதேவி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றி, நூலை அறிமுகம் செய்து பேசினர். நூலாசிரியர் பிரேமி ஏற்புரை யாற்றினார். கவிஞர் அறிவரசு நன்றி கூறினார்.