புதுக்கோட்டை, ஏப்.15- சட்டமேதை அம்பேத்கரின் 132-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழு வதும் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதுக் கோட்டையில் உள்ள சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலை மையில் உறுதிமொழி ஏற்று மாலை அணி வித்து மறியாதை செலுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்
தமுஎகச சார்பில் வேதாரணியம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கீழையூர் ஒன்றியம் தமுஎகச சார்பில் திருப்பூண்டி மூலக்கடையில் அம்பேத்கர் பிறந்த நாள் குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தீண் டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம், சிஐடியு, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானாவில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் பழநிசாமி, மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர்அக மது உட்பட சிபிஎம், காப்பீட்டு கழகம், சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிபிஎம் மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் இ.பி.ரோடு, திருச்சி பெல் டிரெய் னிங் சென்டர் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு சிபிஎம், வாலிபர், மாணவர், மாதர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தி னர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் சிபிஎம், திமுக, மதிமுக, விசிக, திக நிர்வாகிகள் மரி யாதை செலுத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை சிஆர்சி டெப்போ அருகி லுள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலை மையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதை யடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், மகிழஞ்சேரி, திருத்துறைப் பூண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ் வில் வாலிபர் சங்க, தமுஎகச, மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தமுஎகச - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தஞ்சையில் அம்பேத்கர் சிலைக்கு தீ.ஒ.மு மாவட்டத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், தீ.ஒ.மு மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோ தண்டபாணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல், பேராவூரணி, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தஞ்சை வடக்கு வட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலச் செயலா ளர் எஸ்.கோதண்டபாணி, சாலைப் பணியா ளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கே.பழனிச் சாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் விசிக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்டச் செயலாளர் (பொ) உறவழகன், நகரச் செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆட்சியர் உறுதிமொழி ஏற்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அம்பேத்கரின் படத்திற்கு ஆட்சியர் தி. சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம் பரம் உள்ளிட்ட மற்றும் அரசு அலுவலர் கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொ ழியை எடுத்துக்கொண்டனர். இதேபோல் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் அம்பேத்கர் படத்திற்கு மரி யாதை செலுத்தினார். இதில் நகராட்சி உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.