பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் எட்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களை பள்ளி முதல்வர் ஹேமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருத்துவர் பி.விஜய் மழலையர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் சந்திரோதயம், மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் சக்தி, கனிதா, சத்தியா, வேம்பு, ஆசிரியர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.