பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலம்பாடி மற்றும் எளம்பலூர் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறும் நடைமுறையை மாவட்ட தேர்தல் அலுவலர் க.கற்பகம் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்தார்.