கும்பகோணம், ஜன.25 - கும்பகோணம் கிஸ்வா - சத்திய சோலை சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கும்ப கோணம் அல்-அமீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிஸ்வா தலை வர் பி.எஸ்.முகமது யூசூப் தலைமை வகித்தார். சத்திய சோலை தலைவர் முகமது யூனுஸ், செயலாளர் ஜாஹிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அல் அமீன் பள்ளி தாளாளர் எம்.என்.முகமது ரபி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப.தமிழழகன், தொழில் அதிபர் பி.எஸ்.சேகர் ஆகியோர் புத்தக கண்காட்சி விற்பனையை தொடங்கி வைத்தனர். புத்தக கண்காட்சி ஜன.27 அன்று வரை நடை பெறுகிறது. கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. விழாவில் கிஸ்வா நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர். திட்டக் குழு தலைவர் அன்சர் அலி நன்றி கூறினார்.