தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமத் தில், ஈச்சங்கோட்டை முனை வர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி கள் கிராமப்புற வேளாண் மைப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனொரு பகுதியாக, தாமரங்கோட்டை கிரா மத்தில், ஊரகப் பங்கேற்பு திறனாய்வை அந்த மாணவி கள் நடத்தினர். இந்நிகழ் வில், அக்கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், கிராம எல்லை வரைபடம், சமூக வள வரைபடம் ஆகிய வற்றையும், அக்கிரா மத்தின் முக்கிய நிகழ்வு களை காலக்கோடு என்னும் வரைபடத்தில் குறிப்பிட் டும், அத்துடன் இணைந்து அக்கிராம மக்களின் தினசரி கால அட்டவணை, கல்வி யறிவு விகிதம், இயக்க வரை படம் முதலியவை குறித்தும் அவர்களுக்கு விளக்கினர். அதுமட்டுமின்றி, பயிர் பிரமிடு, நோய் மரம், தீர்வு மரம், பருவகால அட்ட வணை போன்றவை குறித் தும் அந்த மக்களுக்கு வேளாண் கல்லூரி மாணவி கள் எடுத்துரைத்தனர். இதில் கிராம பெரி யோர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வ முடன் பங்கேற்று, வேளாண் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினர்.