districts

img

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை துயரத்தில் தள்ளுவதா?

புதுக்கோட்டை/திருவாரூர், ஆக.12 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை  செய்யும் விவசாயத் தொழிலா ளர்களை துயரத்தில் தள்ளுவதைக் கண்டித்து விவசாயத் தொழிலா ளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட் டம் நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித்திட்டத்தில் வேலை  அட்டை வைத்துள்ள அனைவ ருக்கும் அரசு நிர்ணயித்த கூலியை யும், வேலை நாட்களையும் வழங்க  வேண்டும். 4 மாதங்களாக கூலி  வழங்காமல் விவசாயத் தொழிலா ளர்களை துயரத்தில் தள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் முழுமையாகவும் தொ டர்ச்சியாகவும் வேலை வழங்க வேண்டும். இந்த வேலைகளை கட்டு மானப் பணிகளில் புகுத்தி விவசா யத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் நடவ டிக்கைகளை கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றியத் தலைவர் வி.பழ னிச்சாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். கேரிக் கைகளை விளக்கி மாவட்ட துணைத்  தலைவர் எம்.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எஸ்.பெருமாள், சிபிஎம்  மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்க வேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றி யச் செயலாளர் மா.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் கண்டன  உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

ஊராட்சிக்கு 200 பேருக்கு வேலை வழங்க ஒப்புதல்

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலு வலர்கள் பி.தமிழ்ச்செல்வன், ஜி. முத்துராமன் ஆகியோரிடம் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுழற்சி முறை இல்லாமல் தினந்தோறும் 200  பேருக்கு வேலை வழங்குவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல்  வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே பேரணியாக புறப்பட்டு, குட வாசல் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு குடவாசல் வடக்கு-தெற்கு  மற்றும் குடவாசல் நகர விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைவர்கள் எஸ். ஆனந்தன், பி.சுப்பிரமணியன், எம். சோமு ஆகியோர் தலைமை வகித்த னர். அமைப்பின் செயலாளர்கள் த. லெனின், பி.சந்திரகாசன், ஆர்.வி. லெனின் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலை வர் டி.முருகேஷ் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென்னடி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி, விவசாயிகள் சங்கத்தின் (பொ) ஒன்றியச் செயலாளர் டி.அண்ணா துரை ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இரா.மணியன், செயலா ளர் கே.கோபிராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் கோரிக்கையை விளக்கி  பேசினார். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வலங்கைமான்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழி லாளர் சங்க ஒன்றியத் செயலாளர்  என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி,  துணைச் செயலாளர் கே.சுப்பிரமணி யன், அமைப்பின் ஒன்றியச் செயலா ளர் என்.பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோட்டூர் கோட்டூர் ஒன்றியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ரகுபதி தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகம் ஆகி யோர் கோரிக்கையை விளக்கி உரை யாற்றினர்.

திட்டத்தை முடக்க அனுமதிக்க மாட்டோம்!

எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு

கறம்பக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் எம்.சின்னதுரை எம்எல்ஏ., பேசியதாவது: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலையும் ரூ.600  கூலியும் வழங்க வலியுறுத்தி நாங்கள்  தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரு கிறோம்.  தேர்தல் பிரச்சாரத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலையும், 350 ரூபாய் கூலியும் வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும். பணித் தளத்தில்  முரட்டுத்தனமான, தேவையற்ற நிபந்தனை கள் விதிப்பதை நிறுத்த வேண்டும். இத்திட்டம் சிறப்பதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சித்து வரு கின்றனர். இத்திட்டத்தை முடக்குவதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு  கேரள அரசு ரூ.10 லட்சம் ஒதுக்குகிறது. கலை ஞர் கனவு இல்லத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் ரூ.6 லட்சமாவது தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிக்கும் அனைவரையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.