கரூர், ஆக.24-
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண் வளர்ச்சித் திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடை பெற்ற, இக்கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கடந்த மூன்றாண்டு களில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணி களை தீவிரப்படுத்துவது குறித்தும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், சிறுதானிய இயக்கம் 2023 -24 உணவு தானிய உற்பத்தி குறித்தும், தோட்டக் கலைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முருங்கை சாகுபடி பரப்பு விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப் பட்டது.
மேலும் அங்கக வேளாண்மை திட்டப் பணிகள் குறித்தும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை பொறியியல் துறையில், நிலம் மேம் பாட்டு பணிகளில் இயந்திரங்கள் பயன்பாடு குறித்தும், சூரிய சக்தியில் இயங்கும்- மின் மோட்டார் அமைத்தல், சூரிய கூடார உலர்த்தி அமைத்தல் குறித்தும், மின் மோட்டார், அறுவடைக்கு பின் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர்(பொ) கலைசெல்வி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மணிமேகலை, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.