மயிலாடுதுறை, பிப்.23- சில நாட்களுக்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட் டம் அமைப்பின் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமையில் நடைபெற்றது. பல தலைமுறைகளாக கோயில் மனை களில் வீடு கட்டி குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும், விவசாய நிலங்களை பயன்படுத்தி வரும் பயனாளிகளை, நியாய வாடகை என்ற பெயரில் ஒரு தலைபட்சமாக பல மடங்கு வாடகையை உயர்த்தியும், முன் தேதியிட்டு பல லட்ச ரூபாயை நிலுவைத் தொகை என கணக்கிட்டு உடனடியாக செலுத்தவும் வற் புறுத்துகிறது. தொகையை செலுத்தவில்லை யெனில் அப்புறப்படுத்தபடுவீர்கள் என்று அராஜகமாக செயல்படும் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறையை கண் டித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலை யில் மாவட்ட ஆட்சியர் நேரடி தலையீடு மற்றும் கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனிடையே கோட்டாட்சியர் அலுவல கத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் வ. யுரேகா தலைமையில் வெள்ளியன்று நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அறநிலையத் துறை அதிகாரிகள், அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாநிலப் பொரு ளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் த. ராயர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். அறநிலையத் துறையின் நடவடிக்கை சம்பந்தமாக அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் செய்துள்ள மேல்முறையீடு குறித்த ஆணையரின் முடிவு மார்ச் 11 அன்று வந்த பிறகு போராட்டத்தை நடத்துவதென அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.