கரூர், செப்.6 - பள்ளியில் பட்டியலின பெண் சமைப் பதை எதிர்த்தவருக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். பள்ளி களில் எவ்வித பாகுபாடு காட்டக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி னார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரை சேர்ந்த சுமதி என்பவர் சமைக்கிறார்.இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்பள்ளியில் பயிலும் பிற பிரி வினரை சேர்ந்த 15 குழந்தைகள் காலை உணவை புறக்கணித்து வந்தனர். இது தொடர்பாக ஆகஸ்ட் 29 அன்று மக ளிர் திட்ட இயக்குநர் குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் உணவு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி னார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட்30 அன்று, இதரப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மட்டுமே காலை உணவை சாப்பிட்டனர். இதன்பின்னர் செப்டம்பர் 5 அன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், உண வின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தார். மேலும் காலை உணவை உண்ணாத 15 குழந்தை களின் பெற்றோர்களிடம் ஆட்சியர் விசா ரித்தார்.அப்போது, பாலசுப்பிர மணியம் என்பவர், ‘அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு உண்ணாது என்றும், வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும்’ தெரிவித்தார். இவ்வாறு பேசிய பாலசுப்பிர மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்ப டும் என்று எச்சரிக்கப்பட்டது. பின்பு, பாலசுப்பிரமணியன் மன்னிப்புக்கோரி யதன் அடிப்படையில் எச்சரித்து அனுப் பப்பட்டார். அனைத்து பெற்றோர்களும் தங்க ளது பிள்ளைகளை தொடர்ந்து காலை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாகுபா டும் காட்டக் கூடாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, கரூர் வரு வாய் கோட்டாட்சியர் ரூபினா, அரவக் குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.