திருவாரூர், மே 23-
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, கொல்லுமாங்குடியில் இயங்கி வரும் ஏழுமலையான் பாலி டெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு விண்ணப் பங்கள் மே 19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு அட்மிஷன் நடைபெறுகிறது.
இது குறித்து ஸ்ரீ எழுமலையான் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ரவி கூறியிருப்ப தாவது:- இக்கல்லூரியில் இந்தாண்டு முதல் டிப்ளமோ இன் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், டிப்ளமோ மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜி ஆகிய புதிய பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு தவறிய, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் கல்விக்கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம். மயிலாடுதுறை அருகே மூவலூரில் இயங்கி வரும் எழுமலையான் கேட்ரிங் கல்லூரியில் மே 19-ஆம் தேதி முதல் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சேர்க்கை நடைபெறுகிறது.
அழகப்பா பல்கலை கழகப் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது இக்கல்லூரி. மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெறதாவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பாடப்பிரிவு கள் உள்ளன. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக் கும் 100 சதவீதம் வேலை வாய்ப்பும், படிக்கும் போதே சம்பளம் பெறும் வாய்ப்பும் பெற்றுத்தரப் படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் பிர தான சாலையில், மூவலூரில் இயங்கி வரும் ஏழு மலையான் ஐடிஐ-இல் மே 11-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
எலக்ட்ரீஷி யன், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் கற்றுத் தரப்படுகிறது. என்சிவிடி-அங்கீகராம் பெற்ற நிறுவனம் இது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்சி விடி பிரிவுகளிலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஒரு வருட எஸ்சிவிடி பிரிவுகளிலும் சேரலாம். 28 வருடங்கள் மூன் அனுபவும் கொண்ட ஸ்ரீ எழுமலையான் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உறுதி என்றார்.