திருவாரூர், மே 9-
குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண வர்கள் சேர்க்கை உதவி மையத்தை மாண வர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.
குடவாசல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவு களுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்ய குடவாசல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த மையம் மே 8 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணம் ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தி ஐந்து கல்லூரிகளுக்கு விண்ணப் பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ.2 பதிவுக் கட்டணமாக செலுத்தி ஐந்து கல்லூரிகளுக்கு விண் ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாண வர்கள் பதிவு செய்ய வரும்பொழுது அசல் சாதிச் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.இந்த வாய்ப்பினை குட வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவிகள் பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள் மே19-ஆம் தேதி. மாற்றுத்திறனாளிகள, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாண வர்களுக்கான கலந்தாய்வு மே 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் கட்ட பொது கலந்தாய்வு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை யிலும், இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை யிலும் நடைபெற உள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜுன் 22- ஆம் தேதி தொடங்கு கிறது.