districts

திருச்சி முக்கிய செய்திகள்

மன்னார்குடி ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்களின் கோரிக்கைகள் ஏற்பு 

மன்னார்குடி, அக்.22 -  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட் சியர் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி  உள்ளாட்சித்  துறை என்.எம்.ஆர். ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐடியு மன்னார்குடி நகராட்சி தனி யார் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்ட மிட்டிருந்தனர். இந்நிலையில், மன்னார்குடி நகராட்சி ஆணையர் நாராயணன் சங்கத்தினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என். ஹனிபா, மாவட்டப் பொருளாளர் ஜி.ரகுபதி, ஒப்பந்த  தொழிலாளர் சங்க மதிப்புறு தலைவர் கே.எஸ்.சிவசுப்பிரமணியன் மற்றும் சுகாதார  ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், ரூ.5000 பண்டிகை முன்பணம் மற்றும் ஆயிரம் ரூபாய் போனஸ்  வழங்கப்படும். மாதந்தோறும் 5 ஆம்  தேதி சம்பளம் வழங்கப்படும். தூய்மை பணி யாளர்களுக்கு ஓய்வறை அமைக்கப்படும். தொழிலாளர் வைப்பு நிதியை ஜூலை மாதத் தில் இருந்து, நிலுவைத் தொகையுடன் அவர வர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் தாமதமின்றி இஎஸ்ஐ காப்பீடு வரவு வைக்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இதனைத் தொ டர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.

மூலிகைத் தோட்டம் அமைப்பு

பாபநாசம், அக்.22 - மூலிகைகளின் பயன்களை மாணவர்கள் அறியும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த கம்பர் நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஜே.ஆர்.சி சார்பில் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டத்தில் துளசி, கற்றாழை, கீழாநெல்லி, குப்பைமேனி, நொச்சி, பெரியா நங்கை, சிறியா நங்கை, ஓமம், கருவேப்பிலை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மூலிகை கன்றுகள் நடப்பட்டன. இதில் பள்ளித் தலைமையாசிரியர் பாபு, ஜே.ஆர்.சி ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கைப்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு

பாபநாசம், அக்.22 - தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி தஞ்சாவூரில் நடந்தது. 17 வயதிற்குட்பட்ட மாணவர் களுக்கான கைப்பந்து போட்டியில், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2 ஆம் இடம்  பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை யாசிரியர் மணியரசன், உதவி தலைமையாசிரியர் லோக நாதன், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், என்.சி.சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஆதரவற்றோருக்கு  அன்பும் அடைக்கலமும் தரும் பாரதமாதா உதவும் இல்லங்கள்

திருத்துறைப்பூண்டி, அக்.22- பாரதமாதா குடும்ப நல நிறுவனம் 1989 ஏப்ரல் 24 அன்று  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் “சமூக சேவ கர்” எடையூர் மணிமாறனால் நிறுவப்பட்டு முதல் பணியாக  குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி, மாற்றுத்திறனாளி களுக்கான மறுவாழ்வுப் பணிகளாக தொடங்கப்பட்டு 10.04.1992 அன்று தமிழ்நாடு அரசில் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மன வளர்ச்சிக் குன்றியோருக்கும், பல்வேறு உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை கடந்த 34 ஆண்டுகளாக செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக, மனவளர்ச்சிக்குன்றிய மூளை முடக்குவாதம், ஆட்டிசம் மற்றும் பல்வேறு குறைபாடுகளை உடையவர்களுக்கும் சிறப்புப் பள்ளியினை ஏற்படுத்தி 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இப்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் அளித்து வருகிறது. ஊனத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் பயிற்சியினை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு மாவட்ட நோடல் அமைப்பாக அரசாணையைப் பெற்று திரு வாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஆசிரியைகள், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர்களுக்கு 15 நாட்கள்  குறுகிய கால சான்றிதழ் பயிற்சியினை உண்டு உறைவிடப் பயிற்சியாக அளித்து வருகின்றனர். மேலும் ஒன்றிய அரசின் கப்பல் கால்வாய்த் திட்டத்தில் கட லோரச் சமுதாய மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்பார் வையிடுவதற்காக பாரத மாதா குடும்ப நல நிறுவனத்தை மாவட்ட முன்னோடி நிறுவனமாக ஒன்றிய அரசின் சேது சமுத்திரக் கழகத்தின் சார்பில் நியமனம் செய்யப்பட்டு, கட லோரங்களிலுள்ள மீனவர் சமுதாய குடும்பங்களைச் சேர்ந்த  தொழிற்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி  வருகின்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கான பாரத மாதா தாய்வீடு  முதியோர் இல்லத்தினை திருக்குவளை தாலுகா, எட்டுக் குடியிலும், பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கி  திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தலைஞாயிறு நகரப் பகுதியிலும், சக்திசதன் ஆதரவற்ற பெண்களுக்கான இல்லத் தினை திருத்துறைப்பூண்டி தாலுகா எடையூரிலும், முதி யோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உள்ள டக்கிய ஒருங்கிணைந்த வளாக திட்டத்தினை திருத்துறைப் பூண்டி சாமியப்பா நகரிலும், தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதி களில் வீடு இல்லாமல் சாலையோரங்களில் மழையிலும், பனி யிலும், குளிரிலும், கடும் வெயிலிலும் வாடும் வீடற்றோர் களுக்கு மறுவாழ்வு இல்லங்களும், இதை போன்று கும்பகோ ணம் மற்றும் நாகூர் நகராட்சிப் பகுதியில் வீடற்றோருக்கான இல்லங்களும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனிக்கும் உதவியாளர் களுக்கு தங்கி பயன்பெறுவதற்கான இல்லத்தினையும் நடத்தி வருகின்றது. மனவளர்ச்சிக் குன்றிய பச்சிளம் குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி நிறுவனங்களையும் ஒன்றிய-மாநில அரசு களின் ஆணைப்படி செயல்படுத்தி வருகின்றது. மேலும் சாலையோரங்களில் கேட்பாரற்று தங்கியிருக்கும் வீடற்றோர் களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மீட்புத் திட்டத்தினை தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.  பாரதமாதா குடும்பநல நிறுவனம் செயல்படுத்தி வருகிற பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளுக்காக ஒன்றிய,  மாநில அரசுகளின் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளை யும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  முதியோர் இல்லங்கள், சாலையோரங்களில் உள்ள ஆதர வற்றவர்களுக்கான இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இல்லம் போன்றவற்றில் இலவசமாக தங்கி மறுவாழ்வு  பெறுவதற்கு பாரதமாதா குடும்பநல நிறுவன இயக்குநர் முனைவர் எடையூர் மணிமாறனை 99422 27001, 94422 21918  என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற லாம்.