தஞ்சாவூர், நவ.12 - முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்ய கோரி தஞ்சா வூர் தலைமை அஞ்சலகம் அருகே அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) செவ்வாய்க் கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து, முந்தைய நிலையிலேயே நடைமுறைப் படுத்த வேண்டும். குறைந்தபட்ச காப்புத் தொகையை ஒரு லட்சமாகக் குறைக்க வேண்டும். பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயர்த்த வேண்டும். பாலிசி தாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. போராட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் துணைத் தலைவர் வி.சி. முனிசாமி தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் எம்.சங்கர் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் கே. தாமோதரன் தொ டக்கவுரையாற்றினார். மத்திய நிதித்துறை முன்னாள் இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சிஐடியு மாவட்டச் செயலர் சி.ஜெய பால், அகில இந்திய காப்பீட்டு ஊழி யர் சங்கக் கோட்டப் பொதுச் செயலர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலச் செயல் தலை வர் ஆர்.அன்பு நடராஜன், மாநிலச் செயலர்கள் பி.குமார், என்.ராஜா ஆகியோர் போராட்ட விளக்கவுரை யாற்றினார். மாநிலத் தலைவர் ஏ. பூவலிங்கம் நிறைவுரையாற்றினார். இதில், கோட்டப் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.