districts

img

மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்க!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 15 - மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்-லைன்  மருந்து விற்பனையை தடை செய்ய  வேண்டும். சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அத்தியா வசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளை தரம் உயர்த்தி, அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைத்திட செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் திருச்சி கிளை சார்பில் திங்க ளன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி கிளைத் தலைவர் இனியன்  தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மருந்து வணிகர்கள் சங்க  தலைவர் மனோகரன், ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் கிருபாநந்தா மூர்த்தி, மாவட்டச் செய லாளர் சொக்கலிங்கம், மாவட்டப் பொருளாளர் சின்னையா, மொத்த விற்பனை பிரிவு தலைவர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பு செயலாளர் சேகர், சில்லரை விற்பனை பிரிவு தலைவர் வடிவேல், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாநிலக் குழு  உறுப்பினர் முரளி ஆகியோர் பேசி னர்.

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை  பிரதிநிதிகள் சங்க மாநில தலைவர் சத்திய நாராயணன் சிறப்புரை ஆற்றி னார். முன்னதாக புத்தூர் 4 ரோட்டில் இருந்து துவங்கிய இருசக்கர பேரணி,  உறையூர் குறத்தெருவில் நிறைவடைந் தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.