மதுரை, ஏப். 26 திருநெல்வேலி மாவட் டம், நாங்குனேரி அடுத்த டோனாவூரைச் சேர்ந்தவர் சுந்தரி (39). இவர் மதுரை ரயில்வே நிலைய பகுதியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக மதுரை மேல மாசி வீதியில் உள்ள பள்ளி வாசல் முன்பு யாசகம் பெற்று வந்த சுந்தரி, செவ்வாய் இரவு 11 மணியளவில் அதே பகுதி யில் தனது குழந்தைகளான பாலமுருகன், தனலட்சுமி மற்றும் ஆறு மாத பெண் குழந்தை சக்திபிரியா ஆகிய, மூன்று பேருடன் படுத்து உறங்கியுள்ளார். அதிகாலை 3 மணி எழுந்து பார்த்தபோது, ஆறு மாத குழந்தையான சக்தி பிரியா மாயமாகி இருந்தார். அப்பகுதி முழுவதும் தேடிய சுந்தரி, குழந்தை காணாமல் போனது குறித்து, திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுந்தரியிடம் விசாரித்த தில், சில தினங்களுக்கு முன் பெண் குழந்தையை கொடுத் தால், பணம் கொடுப்பதாக சிலர் ஆசை வார்த்தை கூறிய தாகவும், அவர் கொடுக்க மறுத்ததும் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து, மேலமாசி வீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசி டிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, அதில் பதிவாகி யிருந்த நபர்களை சுந்தரி யிடம் காண்பித்து, போலீசார் விசாரித்தனர். அவற்றை பார்த்த சுந்தரி, தன்னிடம் குழந்தையை கேட்ட இரண்டு பெண்களை அடையாளம் காட்டினார். தொடர்ந்து, அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனத் தின் பதிவெண்ணை வைத்து, நடந்த விசாரணையில் மேல பனங்காடியைச் சேர்ந்த செந்தாமரை ,அவரது உற வினரான சோழவந்தானை அடுத்த இரும்பாடி பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி குழந்தையை கடத்தியது தெரிந்தது. இருவரையும் பிடித்த போலீசார் அவர்களிடமி ருந்து குழந்தையை மீட்ட னர். முதற்கட்ட விசாரணை யில், சுந்தரி குழந்தையை கொடுக்க மறுத்ததால் கடத் தியதாக இருவரும் தெரி வித்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்ற னர். 24 மணிநேரத்தில் குழந் தையை மீட்ட போலீசாரை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.