திருச்சிராப்பள்ளி, ஜன.31- ஆதார் இணைப்பு முறையை கைவிடக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நூறுநாள் வேலை அட்டையில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை (ABPS) உடனே திரும்பப் பெற வேண்டும். அட்டை பெற்றுள்ள அனைத்து ஊராட்சி ஜாப் கார்டு பெற்ற அனைவருக்கும் 200 நாள் வேலையும் ரூ.600 கூலி வழங்க வேண்டும். ஊரக வேலை சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திருத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜீயபுரம் கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொருளாளர் இளங்கோ வன், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வ ராஜ், சித்ரா, மாவட்ட துணை செயலா ளர்கள் தங்கராஜ், செல்வமணி, ஒன்றிய செய லாளர் ஜோதி முருகன், சிபிஎம் ஒன்றிய செய லாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் எஸ்.அம்பிகாபதி, இளையபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.