கொள்ளிடம் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை
மயிலாடுதுறை, ஆக.2 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்ததையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அளக்குடி கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கொள்ளி டம் ஆற்று பக்கவாட்டு கரையின் உறுதித்தன்மையினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சீர்காழி வட்டம் வெள்ளமணல், முதலை மேடுதிட்டு, நாதல்படுகை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் முன்கூட்டியே தங்களது அத்தி யாவசிய உடமைகள், சான்றிதழ்கள், கால்நடைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். காவிரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலை களில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலோ அல்லது மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று சுயபடம் (செல்ஃபி) எடுக்க வேண்டாம். தண்ணீர் அதிகமாக வரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்க அனைத்து ஏற்பாடு செய்யப்படும் என பொது மக்களிடம் தெரிவித்தார்.
ஏகோஜி மகாராஜபுரத்தில் 27 ஆவது நாளாக போராட்டம்
மயிலாடுதுறை, ஆக.2 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 27 ஆவது நாளான வெள்ளியன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. குடியிருக்க இடம் கேட்டு அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை கட்டி போராடி வரும் நிலையில் அரசு அதிகாரி கள் இடத்தை பிரித்து தராமல் அலட்சியம் காட்டியதால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 45 குடும்பங்களுக்கு இடங்கள் பிரிக்கப்பட்டு வழங்கிய நிலையில் ஒவ்வொரு குடும்பத்தி னரும் கூரை வீடுகளை கட்டி குடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமதியின்றி மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர், ஆக.2 - பேராவூரணி அருகே அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்ற னர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் காட்டாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படு வதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி, உதவி ஆய்வாளர் புகழேந்தி மற்றும் காவல் துறையினர் புதன்கிழமை நள்ளிரவு பேரா வூரணி பகுதியில், பல்வேறு இடங்களில் விடிய விடிய திடீர் சோதனை நடத்தினர். அப்போது செங்கமங்கலம் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்ததாக பாஸ்கர் (55), சுந்தர்ராஜ் (60), சுப்பிரமணியன் (44), கலைச்செல்வன் (43) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளையும், பேராவூரணி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து, வியாழக்கிழமை 4 பேரையும் பேராவூரணி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்ற னர். மேலும், 8 ஜோடி மாடுகளையும் கும்ப கோணம் கோசாலைக்கு அனுப்பி வைத்த னர். பொதுவாக மணல் கடத்தலில் பிடிபடும் மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டு, மாட்டு வண்டிகளை மட்டும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவது வழக்கமாக இருந்த நிலையில், உயரதிகாரிகள் உத்தரவுப்படி வண்டி மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது இப்பகுதியில் இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதனால், மணல் மாட்டு வண்டித் தொழி லாளர்கள் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் அரசே மாட்டுவண்டிகளுக் கான மணல் குவாரியைத் திறந்து சட்டப்பூர்வ மாக மணல் எடுக்க அனுமதி வழங்க வேண் டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மக்கள் இயக்கமாக மாறினால் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கருத்து
புதுக்கோட்டை, ஆக.2 மக்கள் இயக்கமாக மாறினால் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழ மை இரவு நடைபெற்ற 7-வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் விருதாளர்களுக்கு விருது வழங்கி அவர் பேசியது: ஒரு அறிவு சமூகத்தை உருவாக்க மாவட் டத்தை உருவாக்க இந்த புத்தகத் திருவிழா காரணமாக இருக்கிறது. வயநாட்டில் நிலச் சரிவு பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கு மக்களாகிய நாம் தான் காரணம். இயற்கையை பாதுகாக்கத் தவறிய தால் ஏற்பட்ட பாதிப்பு. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் வெப்பத்தாலும் மறுபுறம் மழையா லும் பாதிப்பை சந்திக்கிறோம். இந்தியாவிலேயே அதிக நீளம் (1,076 கிலோ மீட்டர்) கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடற் கரை மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்துள் ளது. இப்பகுதியை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வாகன பயன்பாடு களை தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்தை யும் சைக்கிள் போன்ற வாகனங்களையும் பயன் படுத்தலாம். மின் சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நீரின் செலவினங்களை குறைக்க முடியும். மக்கள் இயக்கமாக மாறினால்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ் ஹைக்கூவின் தடயங்கள் என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி பால புரஸ்கர் விருதுபெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ் உரையாற்றினார். புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ உள்ளிட்டோர் பேசி னர். விருதுகள் வழங்கல் நிகழ்வில் குடியசுத் தலைவரின் தமிழறிஞர் விருது பெற்ற பேரா.சு.மாதவன், பால சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ், தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்ற கவிஞர் தங்கம்மூர்த்தி, எழுத்தாளர் ப.உமாபதி, எழுத்தா ளர் அண்டனூர் சுரா, முனைவர் சி.சேதுராமன், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, இரா.சம்பத்குமார், ஜீவி, ஞா.சுந்தரத்தரசு, மு.முத்துசீனிவாசன், வீ.கே. கஸ்தூரிநாதன், நெ.இராமச்சந்திரன் உள்ளிட் டோரை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நினை வுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.