நாகர்கோவில், ஆக.19- ராதாபுரத்தில் இருந்து கனிம வளம் ஏற்றி வந்த கனரக லாரி, மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதி யில் மோதி விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்திற்கு குமரி மாவட் டம் வழியாக பல்வேறு இடங்களில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் முறை யான அனுமதியின்றி அளவுக்கு அதிக மாக பாரம் ஏற்றி கொண்டும் செல்லப் படுகிறது. இந்நிலையில், வெள்ளி யன்று (ஆக.18) நள்ளிரவு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு சென்ற கனரக லாரி மார்த்தாண்டம் மேம்பா லம் தொடக்கத்தில் மோதியது. லாரி யின் முன் பக்க 2 சக்கரங்களும் துண்டாகி சென்று உள்ளது. மேலும் மேம்பாலத்தின் நுழைவாயிலில் இருந்த பெயர் பலகை துண்டானது. இந்தச் சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த ஜெயராஜ் (42) காயம் அடைந்தார். அவரை லாரியின் உரிமை யாளர் மற்றும் சக ஓட்டுநர்கள் அங்கி ருந்து காரில் அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்து வமனையில் சேர்த்தனர். விபத்து சம்பவம் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அல்லது காவலர்களோ கனரக லாரிகளை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.