districts

img

தொடர் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மயிலாடுதுறை,ஆக.22-  மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  வியாழ னன்று நடைபெறவிருந்த  போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் விவசாய கடன் என்ற பெயரில் மோசடியாக ஏமாற்றி  ரூ.15 கோடி வரை பணம் கையாடல் செய்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலா ளர் சதீஸ்குமார் மற்றும் அவரது உதவியா ளர்களை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு தலைமையில் வியாழனன்று தொடர் காத்திருப்புப் போராட்டம் அறி விக்கப்பட்டிருந்தது. இதனிடையே கோட்டாட்சியர் தலை மையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்தி வைப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி முன்பு  கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் அறிவித்தார். உறுதிய ளித்தபடி விசாரணைக்குழு அமைத்து உரிய நடவடிக்கை இல்லையெனில் போராட் டத்தை நடத்துவோம் என்றும் கூறினார்.