திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை யில் திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தூரம் சர்வீஸ் சாலை அமைக்காமல் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு டோல் வசூ லிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு பொது நல அமைப்புகள், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பி னர், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் சாலை அமைப்பதில் ஒன்றிய- மாநில அரசு கள் தொடர்ந்து அலட்சியமாக இருக்கின்றன. இதனால் இப்பகுதியில் பல்வேறு விபத்து கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலி யாகி உள்ளனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் வெள்ளியன்று திருவெறும் பூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதிச் செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர் கண்டன உரையாற்றி பேசுகையில், “திருச்சி-தஞ்சை சாலையில் நாள்தோறும் நிகழும் சாலை விபத்தினால் உயிர் பலியாவதும், கை-கால், உடல் உறுப்புகளை இழந்து ஊனமாவதும் தொடர் கதையாகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது? மக்கள் சாலையை கடக்கும் இடங்க ளில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். மின் விளக்குகளை எரியச் செய்ய வேண்டும். சாலையில் இருக்கும் மண் குவியலை அகற்ற வேண்டும். திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் அருகே மூடப்பட்டுள்ள பாதையை உரிய பாதுகாப்பு வசதியுடன் மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தி னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவெ றும்பூர் தொகுதி பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.