districts

img

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம்

ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் வீர.மோகன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), பி.செந்தில்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), ஐக்கிய விவசாய முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.