மயிலாடுதுறை, நவ.1 - அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கலை திறமைகளையும், தனித்திறமை களையும் ஊக்குவித்து உலகறிய செய்ய தமிழ்நாடு அரசு வகுத்த சிறப்பான ஒரு முயற்சிதான் “கலைத் திருவிழா”. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில், மயி லாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட்டார அளவி லான கலைப் போட்டிகள் நிறைவ டைந்து அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செம்பனார்கோ விலில் உள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா அக். 26-28 தேதிகளில் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்குநரின் செயல் பாடுகள், கல்விச்சாரா செயல்பாடு கள் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கலைத்திரு விழாவை சிறப்பாக நடத்த அறிவுறுத் தப்பட்டு, வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதில் வெற்றியடைந்த மாண வர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகள் தற்போது பல்வேறு முறைகேடுகள், குளறு படிகளோடு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (SSA) மாவட்ட திட்ட அலுவலகத்தில் பணியாற் றும் மாவட்ட ஒருங்கிணைப்பாள ரான தெய்வமோகன் என்பவரால் தனிநபர் ஒருவரின் விழாபோல நடந்து முடிந்துள்ளது. மாண வர்களின் கலைத்திறனை ஊக்கு வித்து அங்கீகரிக்கும் சிறப்பான நடவடிக்கையை சீர்குலைக்கும் விதமாக இது இருந்துள்ளது. விழா நடத்த அரசு பள்ளிக் கல்வித்துறை லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்தும், பலரின் நன் கொடை மூலம் விழா நடத்தப்பட்டுள் ளது. அரசு வழங்கிய நிதியை முறையாக செலவிடவில்லை என்றும், போட்டியை நடுநிலை யோடு நடத்தவில்லையென்றும் தனக்கு தெரிந்த, கவின் கல்லூரி யில் பட்டம் பெறாத நடுவர்களை கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கு பதிலாக, மாண வர்களின் திறமைகளை அவமதிக் கும் வகையில் விழா நடந்துள்ளது.
புறக்கணிக்கப்பட்ட மாணவர்
மயிலாடுதுறை ஒன்றியம், திரு மங்கலம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் வெற்றி பெற்றும், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவிடாமல் திட்டமிட்டு, சுற்றறிக்கை அனுப்பா மல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு வேண்டிய குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சாதகம் செய்வ தாகவும் புகார் எழுந்தது. இது சம்பந்தமாக இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராம லிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்துள்ள புகார் மனுவில், “அக்டோபர் 26 அன்று நடந்த 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை யிலான போட்டிகளில் கல்வித் துறை வழிகாட்டிய அறிவுரைகளை பின்பற்றாமல் போட்டிகள் நடத்தப் பட்டதென்றும், அக்.28 அன்று நடைபெறும் போட்டிகளிலாவது தகுதியான கவின் கல்லூரியில் பட்டம் பெற்ற நடுவர்களை நிய மித்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றும் மாணவர் களின் திறமைகளை அவமதிக் கும் வகையில் நடத்தப்படும் போட்டியை கண்காணிக்க வேண்டு மெனவும் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், முதன்மை கல்வி அலுவலர் அதை அலட்சியப் படுத்தியே அக்.28 ஆம் தேதி போட்டிகள் முழுக்க நடந்துள்ளன என இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிபாரதி, மாவட்டத் தலைவர் அமுல்காஸ்ட் ரோ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிற அரசுப் பள்ளி மாணவர்களின் கலை மற்றும் தனித்திறனை ஊக்குவிக் கும் கலைத் திருவிழாவை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. விழாவை நடத்துகின்ற போது கல்வித்துறை அதிகாரிகள் கட மைக்கு பணியாற்றுவதாகவே தெரிகிறது. வழிகாட்டும் நெறி முறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு தங்களுக்கு வேண்டியவர் களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வி துறை உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் கட்ட மைப்பை உருவாக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியப் போக்கில் பணியாற்றுகின்றனர். செம்பனார்கோவில் கலை மகள் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழாவில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி களுக்கான கட்டமைப்புகளை முறை யாக உருவாக்காததால் மாண வர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சிறிய அளவிலான பாக்ஸில் உணவை வழங்கியதோடு பலருக் கும் உணவில்லாமல் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள செம்பனார் கோவில் கடைத்தெருவுக்கு நடந்து சென்று சாப்பிட்டு வரவேண்டிய அவலநிலையை அதிகாரிகள் உரு வாக்கி இருக்கின்றனர்.கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி களை தேவையான அளவிற்கு ஏற்படுத்தி தராமல் அரசு ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்த வில்லை என்றே தெரிகிறது. தகுதியான நடுவர்களை நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட் டும் எழுந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அரசுப்பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்து தவறு இழைத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாப்படுகை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் ஒன்றுகூடி விழா நடத்தி மாண வர்களை உற்சாகப்படுத்தினர். அதை மாவட்ட கல்வி அலுவல ராக இன்றும் பணியாற்றுகிறவர், ‘என்ன கிழிச்சிட்டானுங்க, பாராட்டு விழாவெல்லாம் நடத்துகிறீர்கள்’ என பேசியது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டத்தை சீரழிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?