திருச்சிராப்பள்ளி, நவ.27 - இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மாவட்ட மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க நிர்வாகி கள் கூட்டம் செவ்வாயன்று நடந்தது. கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய தலைவர் மரு. அஷ்ரப், தேசிய துணைத் தலைவர் குணசேகரன், திருச்சி இந்திய மருத்துவ சங்க தலைவர் சுரேந்திர பாபு, செயலாளர் முகேஷ்மோகன், தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க தலைவர் ரமணி தேவி, தென் மண்டல துணை தலைவர் சர்மிளா, திருச்சி தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் உமா வேல்முருகன், பொருளாளர் லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவா திக்கப்பட்டது. கூட்ட முடிவில் மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ரமணிதேவி, திருச்சி தலை வர் தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: மகப்பேறு கால இறப்பு, இந்தியா வில் குறிப்பாக தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனை வரின் கூட்டு முயற்சிதான் காரணம். மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். இரவு 11 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடத்துவது, மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்வதாக கூறி மிரட்டுவது, மருத்து வர்களை கொலைகாரர்கள் போல சித்த ரிப்பது, நோயாளியின் நோய் குறித்த அறிக்கையை கிழித்து எறிதல் போன்ற செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து அரசிடம் தகவல் தெரிவிக்க இருக்கிறோம். இதுபோன்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை சீனி யர் மருத்துவர்கள் இடம் பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்து தந்த அறிக்கையின்படி ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். அரசும், நிர்வாகமும் மகப்பேறு மருத்து வர்கள் குறித்து ஊடகங்களில் தகவல் தெரிவிப்பது மருத்துவர்களுக்கு எதி ரான அணுகுமுறையை உருவாக்கும். மருத்துவமனைகளை எல்–1, எல்–2, எல்–3 என தரம் பிரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. மருத்துவர்களை தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும். வீட்டில் மகப்பேறு, அதற்கு ஒரு குழு மற்றும் விழா நடத்தி பரிசு வழங்குவதை கடுமை யாக எதிர்க்கிறோம். நோயாளிகள் குணம் பெற வேண்டும் என்ற அடிப்படை யில்தான் அனைத்து மருத்துவர்களும் பணியாற்றுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.