districts

மானியத்தில் மோட்டார் பம்புசெட்டு பெறலாம்

தஞ்சாவூர், ஜூன் 24-  

    தஞ்சாவூர் மாவட்டத்தில், பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.  

    நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்த வும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு  செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக் கின்றன. திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது. மேலும் மின்மாற்றிக்கும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.

     எனவே இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறு களை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு  விவசாயிகளுக்கும் புதிதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்  தஞ்சாவூர் மாவட்டத்தின் பொது பிரிவின ருக்கு 90 எண்களுக்கு ரூ.13.50 லட்சமும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

   மின் மோட்டார்களை வாங்க விவசாயி களுக்கு ரூ.15 ஆயிரம் அல்லது மின் மோட்டார்  பம்ப்செட்டின் மொத்த விலையில் 50 விழுக்காடு, இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் நுண்ணீர் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஒரத்த நாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திரு வோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயி கள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகம், கும்ப கோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திரு விடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோ ணம் உபகோட்ட உதவி செயற்பொறியா ளர்(வே.பொ), பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக் கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.