அரியலூர், ஆக.31- விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 145 கிலோ மீட்டர் தூரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலை யில், இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைய கப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகிறது. இதில் 100 அடி சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து வருகின்றனர். ஆனால் மீன்சுருட்டி கடை வீதிகளில் இருபுறமும் 75 அடி மட்டுமே நிலம் கையகப்படுத்தியது. இந்த சாலை யில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால், வடிகால் வாய்க்கால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீன்சுருட்டி பகுதியில் வெள்ளியன்று இரவு பெய்த மழை நீரா னது இந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலையில் மழைநீர் இதேபோல் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் அமைந்துள்ள மேம்பா லத்தின் கீழும் குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளா கின்றனர். மேலும் வேம்புகுடி ஊராட்சியில் உள்ள குழவடையான் கிராமத்தில் அமைந்துள்ள மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் ரோட்டில் கும்பகோணம் செல்லும் சாலையில், குளம் போல் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் உடனடியாக இந்த மழைநீரை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.